இந்நாட்டை சிங்கள பெளத்த ராஜ்ஜியமாகவா இலங்கை ராஜ்ஜியமாகவா கட்டியெழுப்ப போகின்றீர்கள்?: மனோ கேள்வி

Published By: J.G.Stephan

09 Jan, 2020 | 12:13 PM
image

எனக்கு சிங்­கள ராஜ்­ஜியமோ, தமிழ் ராஜ்­ஜியமோ, முஸ்லிம் ராஜ்ஜி­யமோ வேண் டாம். இலங்கை ராஜ்­யமே வேண்டும். நான் முதலில் ஒரு இலங்­கையன். அப்­பு­றம்தான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்­கள பெளத்த ராஜ்ஜி­யத்தை கட்டியெழுப்ப முயல்­கி­றீர்கள் என்ற அறி­கு­றிகள் தெளி­வாகத் தெரி­கின்­றன.



சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய இலங்கை ராஜ்ஜி­யத்­தையா அல்­லது சிங்­கள பெளத்த ராஜ்ஜி­யத்­தையா நீங்கள் இந்த நாட்டில் உரு­வாக்க விளை­கி­றீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்ற தனியார் தொலைக்­காட்சி அர­சியல் விவா­தத்தில், தனி­நபர் பிரே­ரணை மூலம் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை குறைக்கும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 21ஆம் திருத்­தத்தை கொண்­டு­வந்­துள்ள அர­சாங்க எம்.பி. விஜே­தாச ராஜ­பக் ஷ­விடம் கேள்வி எழுப்­பினார்.

நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு கடந்து, சிங்­கள மொழியில் நடை­பெற்ற இந்த விவா­தத்தில் ஜே.வி.பி.எம்.பி. நளின் ஜய­திஸ்ஸ,  ஐ.தே.க. எம்.பி. முஜிபுர் ரஹுமான், பொது­ஜன பெர­முன எம்.பி. விஜே­தாச ராஜ­பக் ஷ­ ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இந்த நாட்டில் இனங்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம் இல்­லாமல் இருப்­ப­தற்கு சிறு­பான்மை கட்­சிகள் இருப்­பதே காரணம் என்று கூறு­கி­றீர்கள்.  ஆகவே தேர்தல் வெட்­டு­புள்­ளியை உயர்த்தி சிறு கட்­சி­களை இல்­லாமல் செய்ய வேண்டும் என்­கி­றீர்கள். இன்று இந்­நாட்டில் நல்­லி­ணக்கம் இல்லை என்­பது மெத்த சரி. அது ஒரு நோய். ஆனால், அந்த நோய்க்கு நீங்கள் சொல்லும் மருந்­துதான் பிழை­யா­னது.

நல்­லி­ணக்கம் இல்­லாமல் போன­தற்கு இந்­நாட்டு பெரும்­பான்மை கட்­சிகள் சிறு­பான்மை மக்­களை அர­வ­ணைக்க தவ­றி­யதே காரணம். அத­னால்தான் வேறு வழிகள் இல்­லாமல், சிறு­பான்மை கட்­சிகள் உரு­வா­கின. சிங்­களம் மட்டும் என்று 1950களில் இன­வா­தத்தை மைய­மாக கொண்டு பெரும்­பான்மை அர­சி­யல்­வா­திகள் அர­சியல் செய்ய புறப்­பட்­ட­தா­லேயே, சிறு­பான்மை கட்­சிகள் உரு­வாக வழி ஏற்­பட்­டது. இதனால், சுமார் 70 வரு­டங்கள் இந்­நாடு இருளில் இருந்­                தது. 

மிகவும் பிர­யா­சைப்­பட்டு அதை மாற்ற நாம் முயன்று வரும்போது, மீண்டும் அதே பழைய இருளை நோக்கி நீங்கள் இந்­நாட்டை பின்­னோக்கி கொண்டு செல்ல முயல்­கி­றீர்கள். அதா­வது வர­லாற்றிலிருந்து இன்­னமும் நீங்கள் பாடம் படிக்­க­வில்லை என்று எனக்கு புல­னா­கி­றது.

இந்­நாட்டில் இப்­போது, தமிழ் பேசும் மக்கள் தமது தாய்­மொ­ழியில் தமது தாய்­நாட்டை உணர்­வோடு, “தாயே” என தேசிய கீத­மாக பாட முடி­யாத நிலை­மைக்கு நீங்கள் கொண்­டு­வர முயல்­கி­றீர்கள். இதுதான் இன்­றைய யதார்த்தம். இந்த நிகழ்ச்­சியை பார்த்­துக்­கொண்டிருக்கும், இந்­நாட்டின் இன்­றைய ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், அரச எம்.பி.க்கள் ஆகியோர் இதை­யிட்டு வெட்கி தலைகுனிய வேண்டும்.     

இதுதான் பிரி­வினை. சிறு­பான்மை இனங்­களை ஒதுக்கி வைப்­ப­துதான் பிரி­வினை. ஒரே நாட்டை உரு­வாக்க வேண்டும் என்றால், இந்­நாட்டில் வாழும் எல்லா இனங்­க­ளுக்கும், மொழி­க­ளுக்கும், மதங்­க­ளுக்கும் அங்­கீ­காரம் தரு­வதன் மூலமே அதை செய்ய முடியும் என்­பதை உண­ருங்கள்.       

இந்­தி­யாவில் சிறு­பான்மை சீக்­கிய இனத்தை சேர்ந்த மன்­மோகன் சிங் பிர­தமர் ஆக முடியும். அப்துல் கலாம் என்ற முஸ்லிம் ஜனா­தி­பதி ஆக முடியும். இங்கே லக் ஷ்மன் கதிர்­காமர் கூட பிர­த­ம­ராக முடி­யாது. இங்கே இன­வாதம் உள்­ளத்தில் ஆழ­மாக ஊறி விட்­டது. அதை நீங்கள் இன்­னமும் வளர்க்­கி­றீர்கள்.

இன்று உள்ள தேர்தல் சட்­டத்தை திருத்த நாமும் தயார். ஆனால், எப்­படி திருத்­து­வது? இப்­படி வெட்­டுப்­புள்­ளியை உயர்த்தி சிறு கட்­சி­களை ஒழிப்­பதன் மூலம் அல்ல. அது இருக்கும் நிலை­மையை இன்­னமும் மோச­மாக்கி விடும். இது சிறு­பான்மை கட்­சி­களை மட்­டு­மல்ல, அனைத்து சிறு கட்­சி­க­ளையும் பாதிக்கும். எம்மைவிட ஜே.வி.­பி.யை அதிகம் பாதிக்கும். அரசிலுள்ள ஈ.பி.டி.­பி.யை பாதிக்கும். கடந்த காலங்­களில் ஆயுதம் தூக்கிவிட்டு, பின் அவற்றை கைவிட்டு, பாரா­ளு­மன்ற பாதையை தெரிவு செய்­த­வர்­களை பார்த்து மீண்டும் ஆயுதப் போருக்கு செல்லுங்கள். காட்­டுக்குள் செல்லுங்கள். பங்­க­ருக்குள் செல்லுங்கள் என்று சொல்­லு­கி­றீர்கள். வர­லாற்றிலிருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள். இலங்கை ராஜ்ஜியம் என்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இலக்கையும் நிராகரிப்பீர்கள். ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் கைவிட வேண்டும். இது என்னய்யா நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26