சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த போலி செய்தி சட்டத்திற்கு எதிராக சிங்கப்பூரின் எதிர்க்கட்சி(எஸ்.டி.பி) முதல் முறையாக வழக்கு தொடுத்துள்ளது.
போலி செய்தி சட்டத்திற்கு அமைய இணையத்தளத்தில் வெளியிடும் பதிவுகளின் திருத்தங்களை இணைக்கும்படி அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவினை இரத்துச் செய்யுமாறு கோரி நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
இணையத்தளத்தில் வெளியடப்பட்ட கட்டுரை மற்றும் அது தொடர்பிலான பேஸ்புக் பதிவுகளை அகற்றுமாறு ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.பி) கோரிக்கையை மனிதவள அமைச்சகம் மறுத்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவம் இல்லாத ஜனநாயகக் கட்சி புதன்கிழமை மாலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தவறான அல்லது போலி செய்திகளை பதியவிடுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கும் புதிய சட்டம் ஒன்றை 2019 ஆண்டு ஒக்டோபர் மாதம் சிங்கப்பூர் அரசு அமுல் படுத்தியது. இதன் மூலம் தவறான செய்திகளை பரப்புவது சட்டவிரோதம் ஆக்கப்பட்டது. எனினும் இச் சட்டத்திற்கு எதிராக, கூகுள், டுட்விட்டர் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM