ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வகுகின்றனர்.
நல்ல காற்றை சுவாசிக்க வீட்டில் உள்ள பால்கனியில் குழந்தையை அதன் சிறிய தள்ளுவண்டியில் பெற்றோர் அமரவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குழந்தை தாழ்வெப்பநிலை நோயால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. தாழ்வெப்பநிலை ( hypothermia) என்பது ஒரு மருத்துவ அவசரநிலை, இதில் உடல் வெப்பநிலையை மீட்டெடுக்க இயலாது, ஏனெனில் வெப்பநிலை மிக விரைவாக குறைகிறது. இந்த நிலை உங்கள் உடல் வெப்பநிலை 35 ° C க்கும் குறைவான வெப்பநிலையை எட்டச் செய்கிறது. உங்கள் உடல் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும்போது, உங்கள் இதயம், நரம்பு மண்டலம் மற்றும் பிற உறுப்புகள் உகந்ததாக இயங்க முடியாது. உடனடியாக உதவி செய்யாவிட்டால், தாழ்வெப்பநிலை இதயம் மற்றும் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டில் மொத்த தோல்வியை ஏற்படுத்தி இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும்.
குறித்து சம்பவம், அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில் ''இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும் '' என்றும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM