(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் ஆரோக்கியமானதும் வரவேற்கத்தக்க ஒன்றாகவும் அமைந்துள்ளது. எனினும் மலையக மக்கள் குறித்தும் தோட்டத் தொழிலாளர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என மலையக தமிழ் பிரதிநிதிகள் சபையில் எடுத்துரைத்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் இதனைக் கூறினர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் பல நல்ல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக அநாவசிய செலவுகளைக் குறைக்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.
எனினும் இந்த திட்டங்கள் குறிப்பிட்ட தேர்தல் காலத்துக்கு மட்டும் அல்லது பாராளுமன்றத்தை அமைக்கும் வரையில் மாத்திரம் இதனை செய்துவிட்டு மீண்டும் பழைய முறைக்கு செல்லக்கூடாது. தொடர்ச்சியாக இதனை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் அது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.
அதேபோல் தோட்டத் தொழில் குறித்து அவர் ஆரோக்கியமான நல்ல விடயங்களை கூறியுள்ளார். அது மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர் குறித்து அவர் பேசவில்லை. எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை, சம்பளப் பிரச்சினை குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டும். மலையகத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மக்கள் லயன்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் இன்றுவரை அதை புனர்நிர்மாணம் செய்யவில்லை. மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்
ஜனாதிபதியின் கல்வித் திட்டம் ஆரோக்கியமானதும் வரவேற்கத்தக்க விடயமுமாகும். ஆயிரம் பாடசாலைகள் உருவாக்கும்
திட்டத்தில் மலையக பாடசாலைகள் உள்வாங்கப்பட வேண்டும். அத்துடன் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பகுதியில் அவரது சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும். அவரை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.
இந்த விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா உரையாற்றுகையில், இந்த வருடத்தின் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை நிறைவேற்றும் விதத்தில் ஜனாதிபதியின் உரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதில் பிரதான விடயங்களில் பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம், உள்ளூர் தொழிலாளர் பாதுகாப்பு என பல விடயங்கள் உள்ளது. பிரதானமாக மலையக மக்கள் அதிகம் கவனிக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக கூறியவர்கள் இன்று அமைச்சுப் பதவியில் இருந்தும் பதில் எதுவும் இல்லை.
அரசியலமைப்பை திருத்துவதன் மூலமே சிறுபான்மை மக்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் அரசியல் அமைப்பினை திருத்துவதன் மூலமாக சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். சமூக ஊடகங்களில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 80 சதவீத வருகையை பெறாவிட்டால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என கூறப்படுகின்றது. அது உண்மை என்றால் எங்களின் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரின் பதவியே முதலில் பறிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM