கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ்ப்பாணம் அம்பிகாநகரிலுள்ள ஒரு வீட்டிலிருந்து தடைசெய்யப்பட்ட இரு மீன்பிடி வலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டிலிருந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் கண்ணபூரம் பகுதியை சேர்ந்த 46 மற்றும் 50 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மற்றும் வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM