பேஸ்புக் பயனர்கள் தங்களின் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் புதிதாக நான்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு, தனியுரிமை அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக், இன்று உலகில் சுமார் 2.47 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது.
இதில், 2014 இல் பேஸ்புக் பயனாளர்களுக்கான தனியுரிமை அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன.
இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், "நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்க முடியும்?"(Who can see your post?) என்கிற விருப்பத்தேர்வின் மூலம், உங்கள் கணக்கில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற சுய விபர தகவல்கள் மற்றும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பதை பயன்பட்டாளர்கள் இன்னும் தெளிவாகப் பார்க்கவும் மாற்றவும் முடியும்.
"உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?" ("How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.
"ஏனையோர், உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்" ("How People Can Find You") என்ற அம்சத்தின் மூலம், முகநூலில் ஏனையோர் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும், உங்களுக்கு யார் ரிக்வெஸ்ட் அனுப்பமுடியும் என்பதையும் புதிய அப்டேட்டில் பயனாளர்களினால் மாற்றியமைக்க முடியும்.
மேலும், "பேஸ்புக்கில் உள்ள தரவு அமைப்புகள் (Data Settings), பேஸ்புக் இணைக்கப்பட்டுள்ள செயலிகளிலிருந்து பகிரப்படுகிற பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றவும் பயன்படும்" என பேஸ்புக் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM