மதுபோதையில் தண்டவாளத்தில் தலைசாய்த்த நபர் பலி

08 Jan, 2020 | 05:17 PM
image

திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த நிலையில், ரயில் மோதி பலியானதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர். 

கொட்பே, மீனவ கிராமத்தைச்சேர்ந்த  40 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சீனன் குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

நேற்று இரவு தம்பலகமத்தில் இருந்து திருகோணமலையை நோக்கிச்சென்று கொண்டிருந்த  இரவு ரயிலானது சுமார் அதிகாலை 1.15 மணியளவில்  கொட்பே பிரதேத்தை கடக்கும்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04