சோமாலியா பாராளுமன்றம் அருகே இன்று மேற்கொள்ளப்பட்ட கார்குண்டுத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
சோமாலியாவில் அல்கைய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அரசை கவிழ்க்கும் முயற்சியாக, தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில், தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் இன்று தற்கொலைத் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
பாராளுமன்றம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த, பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதனால் அந்த கார் வெடித்துச் சிதறி அருகில் இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்தன. இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதேபோல் கடந்த மாதம் 28 ஆம் திகதி மொகடிஷூவில் அல் ஷபாப் மேற்கொண்ட கார் குண்டு தாக்குதலில் 81 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM