மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு  நியமனம்

Published By: Digital Desk 4

08 Jan, 2020 | 10:38 AM
image

வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதிகளான குடத்தனை, பொற்பனை மற்றும் மணற்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெருமளவான மணல் சட்டத்துக்குப் புறம்பாக அகழப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது என்று மக்களால் அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்வைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களால் தெரிவிக்கப்படும் அதேவேளை, மக்கள் களத்தில் இறங்கி மணல் கடத்தல்களைத் தடுத்து வருகின்றனர்.

கடந்த  திங்கட்கிழமை அந்தப் பகுதிகளில் இடம்பெறும் மணல் கடத்தல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது மணல் கடத்தல் கும்பலால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து கும்பலால் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ரிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்டு சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத சந்தர்ப்பத்தில் இந்த பொலிஸ் குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02