ரயில் மோதி ஒருவர் பலி!

Published By: Digital Desk 3

08 Jan, 2020 | 11:06 AM
image

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (07.01.2020) ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை கொட்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய உபுல் சமிந்த  என பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருகோணமலை கொட்பே பகுதியில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிவந்த ரயில் மோதி உயிரிழந்துள்ளார் . 

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை  சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்