பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தரம் 2 இல் கல்வி கற்கும் சசிதரன் எட்வேட் சாமுவேல் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். பின்னர் சிறுவன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனை மீட்ட உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இறப்பு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது. வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM