(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த மத்திய வங்கியின் தடயவியல் கணக்கறிக்கையை பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்த வேண்டாம் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதை அடுத்து சபையில் எதிக்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சட்டமா அதிபர் ஆலோசனையை புறந்தள்ளிவிட்டு அறிக்கையை சபையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய வேளையில் சபாநாயகர் மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதில் அவர் கூறியதானது,
கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி குறித்த தடயவியல் கணக்கறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது குறித்து சட்டமா அதிபர் ஆலோசனையை நான் பெற்றுக்கொண்டேன். இது குறித்து சட்டமா அதிபர் எனக்கு அறியத்தந்ததானது, மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து இப்போது சட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினாலும் எதிர்காலத்திலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த தடயவியல் கணக்கறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாது என்பதை அறியத் தருகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM