செட்டிகுளம் எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருந்தும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
செட்டிகுளம் நகர் பகுதியிலுள்ள ப.நோ.கூ சங்கத்தின் லங்கா எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற வாகனங்களுக்கு நீண்ட நேரமாக காத்திருந்தும் எரிபொருள் மீள் நிரப்பாததன் காரணத்தால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்று வருவதாகவும் அவ் மீள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அசமந்தமே காரணம் எனவும் ப.நோ.கூ சங்கத்திற்கு இவ்வாறு முறையிட்ட போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இன்றுவரையிலும் மேற்கொள்ளவில்லையெனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் தொடர்ச்சியாக பெற்றோல் வழங்கப்பட்டு வரும் நிலையில் இவ் எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களின் அசமந்தத்தினால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக தீர்வினை பெற்றுத்தருமாறும் பொதுமக்கள் கேட்டு நிற்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM