ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் நீதித்துறையை கேள்விக்குறியாக்கியுள்ளது - லக்ஷ்மன் யாபா அபேவர்தன

Published By: R. Kalaichelvan

07 Jan, 2020 | 04:33 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளன.

நீதித்துறையுடன் தொடர்புடையவர்களிடம் அவர் தொலைபேசியில் உரையாடிருக்கும் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஊடக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, எதிர்க்கட்சியும் இவ்விடயம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ' ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ' பற்றி கருத்து தெரிவிக்கையில் இதனை கூறிய அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கும் போது அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவே பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றோம். ஆனால் தற்போது ரஞ்சன் ராமநாயக்க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் அரசியமைப்பை முற்றிலும் மீறும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறையுடன் தொடர்புடையவர்களிடம் தொலைபேசியில் பேசியிருக்கும் விடயங்கள் மக்கள் நீதித்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கின்றது.

நாம் கடந்த காலத்திலும் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். தற்போதும் கொண்டிருக்கின்றோம். எனவே குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுக்கள் அமைத்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09