குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயம்!

Published By: Vishnu

07 Jan, 2020 | 08:17 PM
image

(செ.தேன்மொழி)

குருணாகலை - கொழும்பு பிரதான வீதியில் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாரவூர்தி மேதி இடம்பெற்ற விபத்தில் சிறுவரொருவர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். 

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகலை - கொழும்பு வீதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவிலே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொத்துஹெர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குருணாகலையிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற தனியார் பஸ் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை கடந்து செல்லமுற்பட்டுள்ளது. 

இதன்போது முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ள பஸ் பின்னர் எதிர்திசையில் வந்த பாரவூர்தியுடனும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது பஸ்சுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , சம்பவத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுள் ஒரு சிறுபிள்ளையும் இருப்பதாக தெரிவிக்கிப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55