மலேசியா நாட்டில் 200 க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு ஆசிரியரொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் 30 வயதுடைய ரிச்சார்ட் ஹக்கல், மதபோதகராகவும் ஆங்கில ஆசிரியராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு மலேசியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூரில் தங்கிய ரிச்சார்ட் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகளாக ரிச்சார்ட் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக 6 மாதக் குழந்தை முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள், சிறுமிகள் என 200 க்கும் அதிகமான குழந்தைகளிடம் இவர் அத்துமீறி நடந்து வந்துள்ளார்.
9 ஆண்டுகளாக எல்லை மீறி நடந்துவந்த ரிச்சார்ட்டின் காம லீலைகள் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, குழந்தைகளிடம் ரிச்சார்ட் நடத்திய அத்துமீறல்களை அவரே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னரே பொலிசாருக்கு ரிச்சார்ட்டின் உண்மை முகம் தெரியவந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரித்தானியா திரும்பிய ரிச்சார்ட்டை பொலிசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விவாதம் நேற்று பிரித்தானிய நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானிய நீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு மோசமான பாலியல் குற்றங்களை செய்த ஒரு குற்றவாளியை இப்போது தான் சந்திக்கிறேன் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த சமுதாயத்திற்கு ரிச்சார்ட் ஒரு பயங்கரமான அச்சுறுத்தல். எனவே, குற்றவாளிக்கு பிணையில் வெளியே வர முடியாதளவிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM