(இராஜதுரை ஹஷான்)
மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சட்டமாதிபர் திணைககளம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தினை அவமதித்த நீதிபதிகளும் முறையான விசாரணைகளுக்கு உட்படுத்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகின்றோம் என மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவிற்கும் இடையிலான உரையாடலில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்புவதே நால்வரது எதிர்பார்ப்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரம் முழுமையாக இவரது விடயததில் வைராக்கியத்துடன் செயற்படுத்தப்பட்டுள்ளன.
பாரத லக்ஷமன் கொலை விவகாரத்தில் பொலிஸ், குற்றப்புலனாய்வு பிரிவினர் சேகரித்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட விதம் தொடர்பில் தற்போது பாரிய சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நியாயம் நிலைநாட்டப்ட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM