எனக்கு எதிராக திலங்க சுமதிபால, ஹத்துருசிங்க ஆகியோர் வழக்குத் தாக்கல் -  ஹரீன் 

Published By: R. Kalaichelvan

07 Jan, 2020 | 02:20 PM
image

(நா.தனுஜா)

விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் அந்தத் துறையிலும், கிரிக்கெட்டிலும் காணப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இல்லாமல்செய்து விளையாட்டுத்துறையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளையே கடந்தகாலத்தில் நான் மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் அவ்வாறு நாட்டை முன்நிறுத்தி செயற்பட்டமைக்காக தற்போது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது திலங்க சுமதிபால, சனத் ஜயசுந்தர மற்றும் சந்திக ஹத்துருசிங்க ஆகியோரால் என்மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அவர்களில் திலங்க சுமதிபால நாட்டின் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை தனக்கு சார்பாக வாதிடுவதற்கு நியமித்திருக்கிறார். ஆனால் அதற்கேற்றவாறான வசதி வாய்ப்புக்கள் என்னிடமில்லை என்பதால், இதுகுறித்த உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறேன்.  

உண்மையில் கடந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் அந்தத் துறையிலும், கிரிக்கெட்டிலும் காணப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இல்லாமல்செய்து விளையாட்டுத்துறையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளையே மேற்கொண்டோம். ஆனால் நாட்டை முன்நிறுத்தி செயற்பட்டமைக்காகவே தற்போது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38