மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மட்டக்களப்பு –கல்முனை கல்லடி,அரசடி பிரதான வீதிகளில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதான, ஏனைய வீதிகளில் கட்டாக் காலி மாடுகள் தற்போது கூட்டாக அழைந்து திரிவதாகவும் இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்து இடம்பெறுவதற்கும் காரணமாக அமைவதாகவும் இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த வீதியில் பயணம் செய்யும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதுடன், அதிரடி நடவடிக்கையின் போது பிடிக்கப்படும் குறித்த கட்டாக்காலி மாடுகளின் உரிமையார்களிடம் சிறிய மாடு என்றால் 2500 ரூபாவும் பெரிய மாடு என்றால் 5000 ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்பட்டு அதன் பின்னர் குறித்த மாடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM