உலகின் மிகப்பெரிய வருடாந்த பனிச்சிற்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
சீனா - ரஷ்யாவின் சைபீரியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஹார்பின் பகுதியில் தொடங்கிய இந்தத் திருவிழாவில் பல்வேறு நாடுகளின் முக்கிய கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மின்னும் விளக்கொளிகளால் பனிச்சிற்பங்கள் பொன்னென மின்னி வருகின்றன.
15 நாட்களில் சுமார் 10,000 தொழிலாளர்களால் 148 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட , நியான்-லைட் 'ஸ்னோ கிங்டம்' சுற்றுலாப் பயணிகளை திகைக்க வைத்துள்ளது.
தற்போது சுமார் 6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடந்து வரும் இந்தச் சிற்பத் திருவிழாவிற்காக சோங்வா ஆற்றில் இருந்து 2 லட்சம் கன மீட்டர் பனிக்கட்டி எடுத்து வரப்பட்டது.
இங்கு பார்வையாளர்களைக் கவருவதற்காக குளிர்கால நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிற்பத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM