சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை உலகமுழுதும் வெளியிட உள்ள திரைப்படம் தர்பார்.
லைகா நிறுவனம் தாயாரித்துள்ள தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிரப்பித்துள்ளது.
ஏற்கனவே லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த வெளியான 2.0 படத்திற்கு மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம், ரூ.12 கோடியை, கடனாக கொடுத்துள்ளது. வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு திருப்பி செலுத்த வேண்டி உள்ளதாக குறித்த நிறுவனம் சென்னை உயர் நிதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்தே உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வுத்தரவை பிரப்பித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, லைகா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘தர்பார் படத்தை வெளியிட அனுமதித்தால், மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகை கிடைக்க காலதாமதம் ஆகலாம். ஒருவேளை திரும்ப பெறமுடியாத நிலை கூட ஏற்படலாம் என்று மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரிக்க முடியாது.
அதேநேரம், திரைப்படத்தை வெளியிட தடை விதித்தால், அது தயாரிப்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் பெயருக்கு பணமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம். இந்த தொகையை செலுத்தும் வரை மலேசியாவில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM