சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கோணாவில் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி ஊற்றுபுலம் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்பகுதியில் தொடர்ச்சியாகக் காணப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் வியாபாரம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் எழுந்துள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மு.சந்திரகுமார் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பிரதேச மக்களால் மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM