தந்தையின் உயிரிழப்பும், தியாகமும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இருண்ட யுகத்தை கொண்டு வரும் என படுகொலை செய்யப்பட்ட ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமானின் மகள் தெரிவித்துள்ளார்.
குவாசிம் சுலைமானி ஈராக்கின், பக்தாத் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்க படையினர் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக படுகொலை செய்யப்பட்டார்.
அது மாத்தரமின்றி ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸ் உட்பட 10 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் சுலைமானியின் சடலமானது அவரது சொந்த ஊரான ஈரானின் தென் மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த இறுதி சடங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுலைமானியின் மகள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந் நிலையில் அமெரிக்காவின் இந்த மூர்க்கத்தானமாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் ஈராக் பாராளுமன்றில், நாட்டிலுள்ள வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஈராக்கில் உள்ள 5000 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை ஈரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர்தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந் நிலையில் அணு ஆற்றல் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்த செய்து கொண்டது ஈரான்.
ஈரானின் இந்த அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகுவதாக டொனால்டு ட்ரம்ப் கடந்தாண்டு அறிவித்தார். புதிய ஒப்பந்தம் ஒன்றைத் தாம் ஏற்படுத்த இருப்பதாகவும் அப்போது கூறி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கத் தொடங்கியது.
இப்படியான சூழலில்தான் அணு ஒப்பந்தம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
இவர்களின் இந்த முடிவானது அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் மாத்திரமன்றி மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM