(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் மத சுதந்திரத்தையும் சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். 'சிங்களயா மோடயா கெவும் கன்ன யோதயா’ (சிங்களவர்கள் முட்டாள்கள் பலகாரம் உண்பதற்கே சூரர்கள்) என்று குறிப்பிட்ட பழமொழி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதியுடன் மாற்றியமைக்கப்பட்டது. நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் வெற்றிப் பெற்றிருந்தால் சிங்கள இனத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாலி திரிபிடக துறையில் தேர்ச்சிப் பெற்ற 5000ஆம் பௌத்த மத பிக்குகளுக்கு டெப் ரக கணனி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுஹததாஸ உள்ளக அரங்கில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு பிரதமர் மேலும் கூறியதாவது,
இடம்பெறும் இந்நிகழ்வில் பெருமையினை ஒரு சில வார்த்தைகளினால் மட்டுப்படுத்த முடியாது.பௌத்த மதத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் சேவையினை மேற்கொள்ளும் தேரர்கள் என்றும் போற்றப்பட வேண்டும்.
பாலி திரிபீடக துறையில் இன்று பல வழிமுறைகளில் தேர்சசிப் பெற்றுள்ளார்கள். பாலி கற்கைகளுக்கு என்று தனி இடம் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் பொறுப்பு மாநாயக்க தேரர்களுக்கு அதிகம் காணப்படுகின்றன. மதத்துடன் தொடர்புடைய கற்கைகளில் நவீன தொழினுட்பங்கள் கையாளப்பட வேண்டும்.
பௌத்த மதம் இலங்கையில் தோற்றம் பெறவில்லை . ஆனால் தேரவாத பௌத்த இலங்கையில் தோற்றம் பெற்று இன்றும் பௌத்த மதத்தை பின்பற்றும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக செயற்படுவது பெருமைக் கொள்ள வேண்டிய விடயமாகும். அரச நிர்வாகத்தில் ஏற்படும் சவால்களும் அதனை எதிர்க் கொள்ளும் வழிமுறையும் பாலி திரிபிடகத்தில் தெளிவுற குறிப்பிடப்பட்டுள்ளது. எமது காலத்தில் மத போதனைகளுக்கும், நெறிப்படுத்தலுக்கும முன்னுரிமை கொடுக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்கு மாநாயக்க தேரர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பெறுபேற்றினை அடிப்படையாகக் கொண்டு பௌத்த மதத்திற்கும், சிங்கள பௌத்தர்களக்கும் ஏற்பட்டிருந்த சவால் எந்தளவிற்கு பாரதூரமானது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் இன்று வெற்றிப் பெற்றிருந்தால் சிங்கள பௌத்தர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கும். எழுந்த சவால்கள் இன்றும் நிறைவுப் பெறவில்லை.
சவால்களின் ஊடாக பலம் பெறுகின்றோம். பல்வேறு நெருக்கடிகளை வெற்றிக் கொண்டதால் இன்று பௌத்த மதத்திற்கு உரிமைகோருபவர்களாக செயற்படுகின்றோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக சவால்களை எதிர்க் கொண்டதால் இன்று தேசியம் பலமடைந்துள்ளது.
சிங்களயா மோடயா கெவும் கண்ண யோதயா என்ற பழமொழி கடந்த நவம்பர் 16ஆம் திகதியுடன் மாற்றியமைக்கப்பட்டன. இனத்தின் விடிவிற்கு செயற்பட்ட மநாயக்க தேரர்களின் அர்ப்பணிப்பு தொடர்பில் புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது. பௌத்த மத சாசனத்தையும், பௌத்த இனத்தையும், நாட்டின் இறையான்மை ஆகிய மூன்றையும் பாதுகாத்தல் என்பது வேறுப்பட்டது அல்ல ஒன்றொடு ஒன்று தொடர்புக் கொண்டுள்ள அடிப்படை விடயங்களாகும்.
சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தால் மாத்திரம் ஏனைய மதங்கள் பாதுகாக்கப்படும் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் அனைத்து இன மக்களின் மதங்களையும், அவர்களின் தனித்துவத்தையும் சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். பௌத்த சாசனத்தை பாதுகாத்து பலப்படுத்துவற்கு பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM