(செ.தேன்மொழி)
அப்புத்தளை - தம்பதென்ன - ஐஸ்பீலி பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு கோரியுள்ள விமானப்படை தளபதி இரு வாரத்திற்குள் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வீரவில விமானப்படை முகமிலிருந்து ரத்மலானை செல்லுவதற்காக புறப்பட்ட விமான படைக்கு சொந்தமான வை 12 இலகு ரக விமானம் அப்புதளை பகுதியில் வைத்து விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதன்போது விமானத்தின் பிரதான விமானியாக கடமைபுரிந்த ஸ்கொடன் லீடர் டப்ளியூ.ஏ.எம்.பி.என்.பி.வீபெத்த , உதவி விமானி பிளைட் லெப்டிணன் கே.எம்.டி.எல்.குலதுங்க ஆகியோரும் அவர்களுக்கு உதவியாக கடமையில் இருந்த சார்ஜன்ட் நிலை வீரர்களான டி.டபிள்யூ.ஆர்.டபிள்யூ.குமார மற்றும் எல்.ஏ.சி.ஹெட்டியா ஆரச்சி ஆகியோரும் உயிரிழந்திருந்தனர்.
இவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனைகள் பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவை பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. நேற்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் , பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் , அப்புத்தளை பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விமான படையினால் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் அடங்கிய குழுவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த விமானபடையின் ஊடகப்பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் செனவிரத்ன விசாரணை தொடர்பான அறிக்கைகள் உரிய அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டதன் பின்னர் , விமானப்படை தளபதியின் ஆலோசனைக்கமைய அது ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM