(எம்.மனோசித்ரா)
அபிவிருத்தி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கும், மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்காமையே எமது பின்னடைவுக்கான காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
ஹோமாகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2015 இல் நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நாம் நிறைவேற்ற தவறிவிட்டோம்.ராஜபக்ஷ ஆட்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டு மக்களின் சொத்துக்களும் முதலும் கொள்ளையிடப்பட்டன. அவ்வாறான மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அப்போது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.
எனினும் இவ்விடயத்தில் எமது பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது நீத்துறைக்கு பொறுப்பான அமைச்சரோ இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் முன்வரவில்லை.எனினும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு துரிதமாக செயற்படுகின்றது என்பது புலப்படுகின்றது.
நாம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன் முதலாக நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் எமக்கு வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அரச அதிகாரத்தை வைத்துக் கொண்டு உள்ளுராட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாமல் போனது.
இதற்கான பிரதான காரணம் 2015 ஆம் எமக்கு மக்கள் வழங்கிய ஆணையை மறந்து நாம் செயற்பட்டமையே ஆகும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM