ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் மூலம், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“வெளிநாடு செல்பவர்களின் இரண்டாவது பயண இலக்கை இந்த அமைப்பு மூலம் கண்காணிக்க முடியும். சட்டங்களை மீறி தப்பி ஓடும் நபர்களைக் கண்காணிக்கவும் இது உதவும்.
எந்தவொரு குடிமகனின் இறப்பும் மூன்று மாதங்களுக்குள் இந்த தரவு மையத்தில் பதியப்பட வேண்டும்.
குடிமக்களின் குடும்ப விவரங்கள் மற்றும் மருத்துவ தகவல்கள் உள்ளிட்ட இரகசிய தரவுகளைப் பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேவைப்பட்டால் இது தொடர்பாக எதிர்காலத்தில் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்படும்.
தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் ஏனைய அனைத்து தனிப்பட்ட தரவுகளும், தேசிய தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM