நாட்டில் பல பகுதிகளிலும், டெங்கு நோய் பரவி வருவதால், டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைக்காக இயந்திரம் வழங்குவதற்கும் அதற்காக தனியான வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து , டெங்கு நோய் பெருமளவில் காணப்படும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்பொழுது இவ்வாறான இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நோயாளி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக நோயாளியின் முழுமையான இரத்தப் பரிசோதனை ( Full Blood Count ) மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பாலான வைத்தியசாலைகளில் இதற்கான வசதிகள் இல்லை. இதனால் நோயாளர்களின் பாதுகாவலர்கள் வெளி இடங்களில் உள்ள இரசாயன கூடங்களில் பெருந்தொகை பணத்தை செலுத்தி இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்திய சாலைகளுக்கும் இந்த இயந்திரத்தை வழங்கவுள்ளது. 20 நிமிடத்தில் இதன்மூலம் பரிசோதனை தொடர்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM