ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருளை பஸ்ஸில் கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பஸ்ஸை நேற்று இரவு 10.30 மணியளவில் செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வழிமறித்த இராணுவம் மற்றும் ,பொலிஸார் அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) போன்றோர் முறியடிப்பினை மேற்கொண்டிருந்தனர்.
மீட்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM