ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

31 Dec, 2019 | 11:36 AM
image

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருளை பஸ்ஸில் கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பஸ்ஸை நேற்று இரவு 10.30 மணியளவில் செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வழிமறித்த இராணுவம் மற்றும் ,பொலிஸார் அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) போன்றோர் முறியடிப்பினை மேற்கொண்டிருந்தனர்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58