கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!  

Published By: Daya

31 Dec, 2019 | 11:33 AM
image

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் 30.12.2019 நேற்று நள்ளிரவு  11.30 மீட்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மலையாள புரத்தைச்சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்