மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நோயாளரினால் ஒருவரினால் ஏனைய நோயாளர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருவதாக மாவட்ட வைத்தியதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு இரு மாதங்களுக்கு முன்னர் விலாசமற்ற மன நோயாளி ஒருவரை 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையூடாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் அந்நோயாளி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டபோதும் மீண்டும் குறித்த நோயாளி கடந்த 22ஆம் திகதியன்று மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும்,55 வயதுடைய ஓ.வி.சுமனதாச என்ற மன நோயாளியே மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் இருப்பதாகவும் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள முகவரியும் போலியானது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் 5 அடி உயரமும் நரைத்த தாடியுடன் மெலிந்த தோற்றமுடைய இந்நபர் திருமணம் ஆனதாகவும் மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடுவதுடன் இவர் பலாங்கொடை, இரத்தினபுரி மற்றும் கண்டி போன்ற பல பகுதிகளின் பெயர்களை கூறுவதால் சரியான இடத்தை அறியமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே தற்போது உடல் நலம் தேறியுள்ளமையால் இந்நபரின் குடும்பத்தினர் அல்லது பாதுகாப்பாளர்கள் யாரேனும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்து அழைத்துச் செல்லுமாறு மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM