(எம்.மனோசித்ரா)
பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஒளிபரப்பு செய்வது தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற துரித இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை முதல் இவ்வகையான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். தனி யார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் மெதுவாக பயணிப்பது, அதேபோல் சாரதிகளும், நடத்துநர்களும் சட்ட விரோத மாகவும், பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டால் குறித்த இலக்கத்தின் ஊடாக முறையிட முடியும்.
இதனிடையே நாளை முதல் பஸ்களில் ஒலிபரப்பு செய்வதற்கு பொருத்தமான ஆயிரம் பாடல்களை வழங்குவதற்கு பயணிகள் போக்கு வரத்து முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விசேட குழுவொன்றின் ஆய்வுகளுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட இந்தப் பாடல்களை மாக்கும்புற மத்திய நிலையத்தில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.
பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் பாடல்களை ஒலிக்க விடுவது தொடர்பில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங் குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM