(எம்.ஆர்.எம்.வஸீம்)
தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பாக அரசாங்கம் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெறும் சாதாரண பிரச்சினைகளையும் அரசியலாகும் நிலையே தற்போது இடம்பெறுகின்றது. ராஜித்த சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார், சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றம் தங்களது கடமையை செய்வதற்கு விட்டுவிட்டு அரசியல்வாதிகள் அதுதொடர்பில் மெளனமாக இருக்கவேண்டும். ஆனால் இன்று அனைத்துவிடயங்கள் தொடர்பாகவும் ஊடக கழியாட்டமே இடம்பெறுகின்றது. அதனால்தான் சாதாரண விடயங்களும் அரசியலாக மாறுகின்றன.
அத்துடன் நாட்டில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை அரசியலாக்கி நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மூடிமறைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இதற்கு பின்னர் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்ப்பற்ற நிறுவனங்களைச்சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள். அந்தவகையில் தற்போது நாட்டில் எழுந்திருக்கும் பிரச்சினைதான் தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பான சர்ச்சையாகும்
இந்த விடயமானது சாதாரணவிடயமாக யாரும் கருதிவிடக்கூடாது. மிகவும் அமைதியான முறையில் பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டிய விடயமாகும்.
அமைச்சர்களோ அரசியல்வாதிகளோ இதுதொடர்பாக தேவையற்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்த பிரச்சினையை பெரிதாக்கி மீண்டுமொரு கறுப்பு ஜூலையை ஏற்படுத்த வேண்டாம் என்றாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM