(நா.தனுஜா)
பரந்த கூட்டணியொன்றை அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, தற்போதுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்தும் பாதுகாத்துத் தக்கவைத்துக் கொள்வதே பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. இயலுமாயின் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். அதனை முன்னிறுத்தி நகர்வுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் நேற்று அநுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாஸ, அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது எமது தரப்பினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலை தோன்றியிருக்கிறது. அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. பலர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களால் சிலருக்குப் பதவியுயர்வு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சிலர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலின் போது அன்னம் சின்னத்திற்கு ஆதரவாகவும், அர்ப்பணிப்புடனும் செயலாற்றிய மக்களைத் தொந்தரவிற்கு உள்ளாக்கும் செயற்பாடுகள் தற்போது அதிகாரத்திலிருப்பவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான அனைவரினதும் சார்பிலும் நாம் முன்நிற்பதுடன், அவர்களுக்கு ஆதரவாகவும் செயற்படுவோம். அதுமாத்திரமன்றி அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அரசாங்கத்தில் இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM