வடமாகாணத்தின் ஆளுநராக சிரேஷட் நிர்வாக அதிகாரியான திருமதி. பி. எஸ். எம். சாள்ஸ் இன்று நண்பகல் காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பார்.
சிரேஷட் நிர்வாக அதிகாரியான திருமதி பி. எஸ்.எம் சாள்ஸ். இறுதியாக சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்ததார்.
இதற்கு முன்னர் அவர் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றினார்.
அத்துடன் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்க்கொண்டதைடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இறுதிவரை வடமாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் பல இழுபறிகள் இடம்பெற்றுவந்த நிலையில், இறுதியில் சிரேஷட் நிர்வாக அதிகாரியான திருமதி. பி. எஸ்.எம் சாள்ஸ் இன்றையதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM