அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இராணுவத்தினர் முகாமுக்குள் இன்று காலை பிரவேசித்து தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றர்.
மேலும் குறித்த விபத்து சம்பவத்தால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 47 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வெடிப்பு சம்பவத்தால் சிதறிச் சென்ற வெடிப்பொருட்களால் கொஸ்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேமாகியுள்ளன.
மேலும் வெடிப்புக்கு உள்ளான பொருட்களின் சிதறல்கள் மற்றும் பாரிய வெடிப் பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளிலுல் சிதறி காணப்படுகின்றன.
தற்போது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியை பார்வையிடுவதற்காக மக்கள் அங்கு வருகைத் தருவதாகவும் இதனால் இப் பகுதியில பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு தமது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே இராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானப்படைக்கு சொந்தமான 212 என ஹெலிகொப்படர் இன்று காலை கொஸ்கம பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM