(தி.சோபிதன்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பல தவறுகளை இழைத்திருக்கின்றது. அதனால் மக்கள் மத்தியில் விரக்தியும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தலைமையின் இத்தகைய செயற்பாடுகளே மாற்றுத் தலைமையின் தேவையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினால் இந்த மாற்றுத் தலைமையை மக்கள் முழுமையாக ஆதரிப்பார்கள் என்றே நம்புகின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு நேற்று கருத்துக்களை தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பிலிருந்த பல கட்சிகளும் அதனை விட்டு வெளியேறியிருக்கின்றன. தனிப்பட்ட நபர்களென வேறு பலரும் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இப்பொழுது இவர்கள் எல்லோரையும் உள்ளடக்கிய கூட்டணியொன்று மாற்றுத் தலைமையாக அமையுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆகையினால் மிக விரைவாக அந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வருமென்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாறான கூட்டு முன்னணியில் அந்த கூட்டு முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யாரையும் இணைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியென்பது அவசியம் என்பதை நாங்கள் எல்லோரும் புரிந்திருக்கிறோம். இந்த பரந்துபட்ட ஐக்கிய முன்னணியின் ஊடாகத்தான் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என்றும் நாங்கள் நம்புகின்றோம். அந்த அடிப்படையில்தான் இந்த மாற்றுத் தலைமையைப் பற்றி நாங்கள் சிந்தித்தோம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விரைவில் அந்தப் பணிகள் நிறைவடையுமென்று நம்புகிறோம்.
இன்றைய கால கட்டத்தில் விக்கினேஸ்வரனின் தலைமையிலேயே அவ்வாறான அணி உருவாகுமென்று நான் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக கூட்டமைப்பின் தலைமை பல பிழைகளை விட்டிருக்கின்றது. பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அவர்கள் பல விசயங்களை பிழையாக கையாண்டிருக்கிறார்கள். அவர்கள் எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து மிக நீண்ட தூரம் விலகிச் சென்றிருக்கின்றார்கள். இவ்வாறான பல விடயங்கள் இருக்கின்ற நிலையில்தான் மாற்றுத் தலைமை தேவை என்ற முடிவுக்கு எல்லோரும் வந்திருக்கின்றோம்.
அவ்வாறான நிலையில் ஒரு மாற்றுத் தலைமை என்பது நிச்சயமாக பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் சரி மக்களுடைய முழுமையான ஆதரவுடன் ஒரு பலம் பொருந்திய மக்கள் அமைப்பாக அது மாற வேண்டும். அவ்வாறு மாறினால் தான் நாங்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அது உகந்ததாக இருக்கும்.
நான் ஏற்கனவே கூறியது போன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவை முன்னெடுத்துச் செல்வதற்கான பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்றன. அதனை அவ்வாறு பலம் பொருந்திய அமைப்பாக மக்கள் மாற்றுமிடத்து நிச்சயமாக அடுத்தகட்ட நகர்வுகளை நாங்கள் இலகுவாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதாவது கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற பழமொழி தமிழில் இருக்கின்றது. இவ்வளவு காலமும் நாங்கள் எல்லோரும் இணைந்து கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும், மக்களுடைய ஆதரவை அதற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டிருந்தோம். அதற்கமைய ஆதரவும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டமைப்பு இன்றைக்கு பல தவறை விட்டிருக்கின்றது.
அந்தத் தவறுகள் குறித்து நாங்கள் திரும்ப திரும்ப சொல்லியும் இருக்கின்றோம். அந்த வகையில் ஒரு மாற்று அணி தேவையென்று கூறினோம். நான் கடந்த பல வருடமாக சாதாரண மக்களுடன் பழகுகின்றேன் என்ற அடிப்படையில் பரவலாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஒரு கருத்து என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் முழுக்க முழுக்க கூட்டமைப்பின் மீது நம்பிக்கையிழந்தவர்களாக, சம்பந்தன் தங்களை ஏமாற்றி விட்டதாக, சம்பந்தன் போன்றோரால் நிறைய விசயங்களைச் செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதனையும் செய்யவில்லை என்ற ஒரு கோபம், விரக்தி, மாற்றம் இது எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
ஆகவே நிச்சயமாக அவ்வாறான ஒரு சூழலில் ஒரு மாற்றுத் தலைமை என்பது தவிர்க்க முடியாதது. அந்த அடிப்படையில் நிச்சயமாக தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு தலைமையை ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவ்வாறான மாற்றுத் தலைமைக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM