தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு - இந்தியாவின் அனுசரனையை பெற்றுக் கொள்ள டக்ளஸ் திட்டம்

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 01:08 PM
image

தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக  இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்று(29.12.2019) நடைபெற்ற இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின்(VTA) கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய தொழிற் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

அண்மைக்காலமாக தொழில்சார்  தகமைகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர் யுவதிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்ததுடன் இவ்வாறானவர்கள், தங்களுடைய தகமைகளுக்கு ஏற்றவகையில் தொழில் வாய்ப்பினை பெற்று கௌரவமாக வாழுகின்ற சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளினால் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதாவது, துணை மருத்துவ சேவைகள், சூரிய மின்கலம், மற்றும் ஹபிறிட் வாகன தொழில்நுட்பம் ஆகிய பயிற்சி நெறிகளை கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு தர வேண்டும் எனவும் தங்களுடைய பயிற்சி நெறிகளை விரிவுபடுத்துவதற்கு பெரும் சவாலாக இருக்கும் கட்டிட பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்வை பெற்றுத் தருவதாகவும் ஏனைய விடயங்களுக்கும் முடியுமான விரைவில் தீர்வை காணுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்;திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08