மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கடை ஒன்றில் சூப் குடிக்க அருகிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினரும் அந்த பகுதியைச் சேர்ந்த குழுவினரும் சென்ற நிலையில் இரு குழுக்களுக்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்திலுள்ள சூப் கடைக்கு அருகிலுள்ள கூளாவடி பிரதேசத்தைச் சோந்த குழுவினர் முச்சக்கரவண்டியில் நேற்று இரவு 7 மணியளவில் சென்றுள்ளனர் இதன்போது அங்கு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர் சூப்குடிக்க சென்றுள்ளனர்
இந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்தர்க்கத்தையடுத்து மோதல் ஏற்பட்டது இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டு தீயில் எரிந்து முற்றாக சேதடைந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிசார் அங்கு சென்ற நிலையில் மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த மோதல் மதுபோதையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM