(எம்.மனோசித்ரா)
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியானது, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் இலங்கை -– இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புக்கு முரணானது. இவ்வாறான செயல்கள் இலங்கையில் தமிழர்களை மேலும் தனிமைப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்று இந்திய அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியமை குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அந்த டுவிட்டர் பதிவில், 'இலங்கை அரசாங்கம் அந்நாட்டின் சுதந்திர நிகழ்வின் போது சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என்று தீர்மானித்திருக்கின்றமை கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்பத்தியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் தமிழர்களை மேலும் தனிமைப்படுத்துவதற்கு வழி வகுக்கும். எனவே இவ்விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 'இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் இலங்கை -– இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்புக்கு எதிரானது' என்று பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.இராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
ஹிந்துஸ்தான் டைஸ்ம்ஸ் இணைய தளத்தில், 'கோத்தாபய ராஜபக் ஷவின் அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி தமிழில் தேசிய கீதம் பாடப்பட மாட்டாது என்று தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் இலங்கை -– இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்' என்றும் எஸ்.இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM