மட்டக்களப்பு அரசடி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் 10 பவுண் தாலிக் கொடியை திருடிய வீட்டு பணிப்பெண் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்துள்ளதுடன் திருடப்பட் தாலிக்கொடியை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள வீட்டின் அறையிலுள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் கொண்ட தாலிக் கொடி ஞாயிற்றுக்கிழமை (29) காணாமல் போயுள்ளது இதனையடுத்து வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்ட பணிப் பெண் மீது சந்தேகம் கொண்டு அவர் காலையில் வீட்டிற்கு சென்ற போது அவரிடம் கேட்ட போது அவர் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்றார்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பணிப் பெண் தான் திருடியதாக ஒப்புக் கொண்டு திருடிய தாலியை வீட்டின் பழைய சாமான்கள் வைக்கப்படும் குளிர்சாதன பெட்டி உன்றில் மறைத்து வைத்திருந்ததுடன் தாலியில் இருந்த தாலிக்காயை தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். ஏன தெரியவந்ததையடுத்து திருட்டுப்போன தாலிக் கொடியை பொலிசார் மீட்டதுடன் 35 வயதுடைய பணிப் பெண்ணை கைது செய்துள்ளனர்
குறித்த வீட்டிற்கு கடந்த ஒரு வாரம் புதிதாக வேலைக்கு சென்றுள்ளதாகவும் சம்பவதினம் குறித்த அறையை துப்பரவு செய்யுமாறும் அன்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தினமும் சந்தி செளியிலுள்ள தனது வீடு சென்று வேலைக்கு வருவதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாணையில் தெரியவந்துள்ளது
இந் சம்பவத்தில் கைது செய்யப்பட் பணிப் பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM