(இராஜதுரை ஹஷான்)
எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது அமர்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும், கட்சியின் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராயவும் மத்திய செயற்குழு எதிர்வரும் இரண்டாம் திகதி கூடவுள்ளது. என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 3 ம் திகதிசெவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் சிம்மாசன பிரசங்கத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய செயற்குழுவிற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் 2ம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழுவில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள செயற்குழுவின் உறுப்பினர்களினதும், பதவிகளினதும் மாற்றங்களை ஏற்படுத்துவது 4வது கூட்டத்தொடர் அமர்வுகளின் விசேட அம்சமாக காணப்படும். அவ்வாறத்திலே செயற்குழுவின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
பாராளுமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் என்ற பெரும்பாலான தரப்பினரது கோரிக்கையினை சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம்.
3ம் திகதி சஜித் பிரேமதாஸவே எதிர்க்கட்சி தலைவராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM