(எம்.மனோசித்ரா)
அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மக்கள் ஆணை வழங்கினால் அதற்கு தான் தயாராவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்க அதிகாரம் தான் வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதைப் போன்றே, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தவறான செயற்பாடுகளையும் குறைபாடுகளையும் விமர்சித்து தவறை சுட்டிக்காட்டி அதனை திருத்திக் கொள்ளும் வழிமுறையைக் கூறும் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கெகிராவை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அரச நியமனங்களைப் பெற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியல் பழிவாங்கலினால் கிடைத்த நியமனங்களை இழந்திருக்கின்றனர். அத்தோடு பதவி உயர்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்பாராத இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்ற, உள்ளாகவிருக்கின்ற அனைவருக்காகவும் நாம் வேறுபட்ட வேலைத்திட்டம் ஒன்றை அமைத்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், இழந்தவற்றை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கும் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைளையும் முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM