கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை ஆசனம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது எதிர்வரும் முன்றாம் திகதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பின் ஊடகங்களிற்கு தகவல் தருகையில் இதனைத் தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் போட்டியிடுவது தொடர்பிலும் மற்றும் மாவட்ட ரீதியாக பங்காளிகட்சிகளுக்கு எத்தனை ஆசனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவு ஏற்பட்டுள்ளது
குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிக்கு எத்தனை ஆசனம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக நடைபெற்றுள்ளது இறுதி முடிவு ஜனவரி மூன்றாம் திகதி பாராளுமன்ற அமர்வின் பின் மீண்டும் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் கொழும்பில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது தொடர்பில் குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக மலையக் கட்சிகளுடனும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம் இவை ஜனவரி மாதம் மூன்றாம் திகதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்றார்.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளான புளெட், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட கட்சி யின் அங்கத்தவர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM