சீனாவில் உணவக உரிமையாளர் ஒருவர் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வேட்டையாடி உணவகங்களில் கறிசமைத்து விற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு மணி நேரத்துக்குள் எட்டு நாய்களை வேட்டையாடிய குற்றச்சாட்டின் பேரில் சீன உணவக உரிமையாளர் ஒருவரையே அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென் என அறியப்பட்ட குறித்த சந்தேக நபர் விஷ ஊசிகளால் நாய்களை சுட்டுக் கொன்றது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி காலையில் ஜாங்ஜியாகாங்கில் உள்ள பெங்வாங் என்ற நகரத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்ததையும் நாய்களை விஷ ஊசி ஏற்றும் துப்பாக்கியால் சுடுவதையும் கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
நாட்டில் குளிர்காலத்தில் நாய் இறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இதனாலேயே உணவக உரிமையாளர் நாய்களை திருடியுள்ளார் என்றும் மக்கள் நாய் இறைச்சிகளை விரும்பி உண்ணும் காலமாக இது காணப்படுகின்றது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM