வட மாகாண முத­ல­மைச்­சரை நீக்­கு­மாறு கோரும் அதி­காரம் சுமந்­தி­ர­னுக்­கில்லை : சுரேஷ்

19 Nov, 2015 | 11:04 AM
image

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்வ­ரனை அப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு கோரும் அதி­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுக்கு இல்­லை­யென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்கள் சார்ந்த விட­யங்­களில் வட மாகாண முத­ல­மைச்சர் உறு­தி­யாக இருப்­ப­தா­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் இவ்­வாறு கோரிக்கை முன்­வைப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் ஊடகப் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் அவுஸ்­தி­ரே­லிய தனியார் வானொ­லி­யொன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வியில் வடக்கு முத­ல­மைச்சர் தொடர்பில் வெளி­யிட்ட கருத்துத் தொடர்பில் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில்,


வட­மா­காண சபைத் தேர்­தலின் போது முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை நிறுத்­துவோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மானம் எடுத்த பின்னர் இறுதியாக நான் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் சென்று விக்­கி­னேஸ்­வ­ரனை தேர்­த­லுக்கு அழைத்­து­வந்­தி­ருந்தோம். அனை­வரும் ஒன்­றி­ணைந்து அவரை வெற்­றி­பெறச் செய்­தி­ருந்தோம்.


தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்­சி­களின் ஏக­தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் வட­மா­காண முதல்­வ­ராக அமர்த்­தப்­பட்ட ஒரு­வரை அக்­கட்­சி­களின் தீர்­மா­ன­மின்றி தனி­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் கோரிக்­கைக்கு அமை­வாக எவ்­வாறு பதவி விலக்க முடி யும். ஆகவே இவ்­வா­றான கோரிக்­கையை முன்­வைப்­ப­தா­னது அடிப்­ப­டை­யற்­ற­தொன்­றாகும்.


அதே­நேரம்இ தமிழ் மக்கள் தொடர்­பிலான விட­யங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் கொள்­கை­க­ளு­டனும்இ தீர்­மா­னங்­க­ளு­டனும் வட மாகாண முத­ல­மைச்சர் ஒரு மித்தே செயற்­ப­டு­கின்றார். குறிப்­பாக கூறு­வ­தானால் இலங்­கையில் இடம்­பெற்ற மனி­தா­பி­மான சட்டமீறல்கள்இ மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம். வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வெளியேற்­றப்­பட வேண்டும், நிரந்­தர அர­சியல் தீர்வு எட்­டப்­பட வேண்டும் உள்­ளிட்ட பல விட­யங்­களில் ஒரே நிலைப்­பாட்­டி­லேயே முத­ல­மைச்சர் காணப்­ப­டு­கின்றார்.


இவ்­வா­றி­ருக்­கையில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தாது உள்­ளக விசா­ர­ணையை வர­வேற்று கருத்­துக்­களை உள்­நாட்­டிலும் வெ ளிநாட்­டிலும் வெளியிட்டு வரு­கின்றார். இது­போன்று மற்றும் பல விட­யங்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முத­ல­மைச்­ச­ரி­னதும் நிலைப்­பா­டு­க­ளுக்­கெ­தி­ரான கருத்­துக்­களை கொண்­டி­ருக்­கின்றார். இதன் கார­ண­மா­கவே முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ராக அவரை நீக்க வேண்டுமென்று கருத்தை சுமந்திரன் முன்வைத்திருக்கலாம்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தீர்மானங்கள் அவற்றின் தலைவர்களின் முடிவுகளுக்கு ஏற்பவே முதலமைச்சர் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41