வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரும் அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் வட மாகாண முதலமைச்சர் உறுதியாக இருப்பதாலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு கோரிக்கை முன்வைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலிய தனியார் வானொலியொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் வடக்கு முதலமைச்சர் தொடர்பில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை நிறுத்துவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்த பின்னர் இறுதியாக நான் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் சென்று விக்கினேஸ்வரனை தேர்தலுக்கு அழைத்துவந்திருந்தோம். அனைவரும் ஒன்றிணைந்து அவரை வெற்றிபெறச் செய்திருந்தோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் ஏகதீர்மானத்தின் அடிப்படையில் வடமாகாண முதல்வராக அமர்த்தப்பட்ட ஒருவரை அக்கட்சிகளின் தீர்மானமின்றி தனியொரு பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக எவ்வாறு பதவி விலக்க முடி யும். ஆகவே இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதானது அடிப்படையற்றதொன்றாகும்.
அதேநேரம்இ தமிழ் மக்கள் தொடர்பிலான விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுடனும்இ தீர்மானங்களுடனும் வட மாகாண முதலமைச்சர் ஒரு மித்தே செயற்படுகின்றார். குறிப்பாக கூறுவதானால் இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான சட்டமீறல்கள்இ மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம். வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும், நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களில் ஒரே நிலைப்பாட்டிலேயே முதலமைச்சர் காணப்படுகின்றார்.
இவ்வாறிருக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சர்வதேச விசாரணையை வலியுறுத்தாது உள்ளக விசாரணையை வரவேற்று கருத்துக்களை உள்நாட்டிலும் வெ ளிநாட்டிலும் வெளியிட்டு வருகின்றார். இதுபோன்று மற்றும் பல விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் முதலமைச்சரினதும் நிலைப்பாடுகளுக்கெதிரான கருத்துக்களை கொண்டிருக்கின்றார். இதன் காரணமாகவே முதலமைச்சருக்கெதிராக அவரை நீக்க வேண்டுமென்று கருத்தை சுமந்திரன் முன்வைத்திருக்கலாம்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தீர்மானங்கள் அவற்றின் தலைவர்களின் முடிவுகளுக்கு ஏற்பவே முதலமைச்சர் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM