(ஆர்.ராம்)
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடன் சந்திப்பொன்றை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவுறாது இருக்கின்றன.
எனவே, குறித்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கி அவற்றை நிறைவுறச் செய்ய வேண்டும் என்பதில் கூட்டமைப்பு கரிசனை கொண்டுள்ளது.
இந்நிலையிலேயே நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடன் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவொன்று எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகியதும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவைச் சந்திப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பு தயாராகியுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின் போதும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பு உட்பட இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர் பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM