ஐக்கிய தேசியக் முன்னணி என்ற கூட்டணிக்குள்ளேயே இன்னும் பல புதிய கட்சிகளையும், சக்திகளையும் உள்வாங்கி பாரிய தேசிய கூட்டணியொன்றை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிளை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த மனோகணேசன்,
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானக் கட்சியாகக் கொண்டு ஏனைய பங்காளிக் கட்சிகளை உள்வாங்கி ஐக்கிய தேசிய முன்னணி என்ற ஒரு கூட்டணி தற்போதும் உள்ளது.
இந்த ஐக்கிய தேசிய முன்னணி என்ற பாரியக் கூட்டணிக்குள்ளேய இன்னும் பல புதிய கட்சிகளையும், சக்திகளையும் உள்வாங்கி பாரிய தேசியக் கூட்டணியொன்றை உருவாக்க நாம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை மையமாகக் கொண்டு அந்த பெரிய கட்சியை பிரித்து, பிறிதொரு கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாம் உடன்படி முடியாது.
உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்படக்கூடாது. அவ்வாறு பிளவு ஏற்படாவிட்டால் தாம் நாம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும்.
அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படவிருந்த பிளவுகளை நாம் ஏற்கனவே முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இன்னும் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கும் சுமூகமாக தீர்வினை காண்போம்.
இதேவேளை வெகு விரைவில் பாரியதொரு மகா தேசியக் கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெலஉறுமைய போன்ற கட்சிகளுக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெற்று வருகின்றது.
எனினும் இது தொடர்பான இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை முழுமையாக எடுக்கப்படவில்லை.
ஹரின் பெர்னாண்டோவின் கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்தாகும், அவர் கட்சித் தலைவர் அல்ல. எனினும் அவரையும் உள்வாங்கிக் கொண்டு பாரிதொரு கூட்டணியை உருவாக்க நாங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM