(எம்.மனோசித்ரா)
எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு ஜனவரி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் அரசாங்க கொள்கை பிரகடனம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடனத்தையடுத்து பிற்பகல் 12.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதியிலிருந்து சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முறைமைகள் குறித்து அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வு கூடவுள்ளது. இதன்போது புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கவுள்ளார். அத்தோடு சிம்மாசன உரையின் அறிவிப்புக்களை ஒழுங்குமுறைப்படி அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய ஜனவரி 3 ஆம் திகதி அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சபைமுதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பதவிகள் தொடர்பில் அறியத்தருமாறு ஆளுந்தரப்பினருக்கு சபாநாயகர் கருஜயசூரிய அறிவித் துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM