நா.தனுஜா
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி புதிய பாடத்திட்டத்தின் கீழ் விஞ்ஞானப்பிரிவில் கொழும்பு விசாகா கல்லூரி மாணவி சச்சினி மலிஷா விஜயவர்தனவும், கணிதப்பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரி மாணவன் தனுஷ ஷிஹான் பொன்சேகாவும், கலைப்பிரிவில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவி ஷொனி மிலிந்து வெலிகமகேவும், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த வினுர ஓஷத கால்லகேவும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
இம்முறை நாடளாவிய ரீதியில் புதிய பாடத்திட்டத்தில் 1 இலட்சத்து 87 ஆயிரத்து 167 பரீட்சார்த்திகளும், பழைய பாடத்திட்டத்தில் 94 ஆயிரத்து 619 பரீட்சார்த்திகளும் மொத்தமாக 2 இலட்சத்து 81 ஆயிரத்து 786 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இவர்களில் புதிய பாடத்திட்டத்தில் பரீட்சைக்கு தோற்றிய 1 இலட்சத்து 13 ஆயிரத்து 637 பேரும், பழைய பாடத்திட்டத்தில் பரீட்சைக்கு தோற்றிய 67 ஆயிரத்து 489 பேருமாக மொத்தம் 1 இலட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் தோற்றிய 42 பேருக்கும், பழைய பாடத்திட்டத்தில் தோற்றிய 29 பேருக்கும் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெறுபேற்றுச் சான்றிதழைப் பெறல்
பெறுபேற்றுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உயர் கல்வியை தொடர்வதற்கு நாளை 30 ஆம் திகதி முதல் இணையதளம் மூலம் (ஒன்லைன் மூலம்) விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் பரீட்சை திணைக்களத்துக்கு நேரடியாக விஜயம் செய்து ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுபேற்று சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அது மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்துக்குள் பிரவேசித்து இலங்கை தபால் சேவையின் ஸ்பீட் மெயில் (Speed Mail) சேவையில் விண்ணப்பிப்பதன் மூலம் உள்நாட்டுக்குள் 48 மணித்தியாலயங்களுக்குள் உயர்தர பெறுபேற்று சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று EMS சேவை மூலம் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பெறுபேற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளுக்கும் நேற்றைய தினமே தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கு வீடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்
இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும். பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்கள் பாடசாலை அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் அதே வேளை, தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களம் அல்லது அரச பத்திரிகைகள் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவை தொடர்பான மேலதி விபரங்களை பரீட்சை திணைக்களத்தின் 011-2784208, 011-2784573, 011-3188350, 011-3140314 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலமும், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர்
அந்தவகையில் வெளியான உயர்தரப் பரீட்சைபெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு:
புதிய பாடத்திட்டத்தின் கீழ் விஞ்ஞானப்பிரிவில் கொழும்பு விசாகா கல்லூரி மாணவி சச்சினி மலிஷா விஜயவர்தனவும், கணிதப்பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரி மாணவன் தனுஷ ஷிஹான் பொன்சேகாவும், கலைப்பிரிவில் கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவி ஷொனி மிலிந்து வெலிகமகேவும், பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் கம்பஹா பண்டாரநாஙக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த வினுர ஓஷத கால்லகேவும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேபோன்று பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் பின்னவெல மத்திய மகா வித்தியாலய மாணவன் தர்ஷன இசுறு சிறிசம்பத்தும், வர்த்தகப் பிரிவில் பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் பாடசாலை மாணவன் நிரோஷன் சந்தருவனும், கலைப்பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் எச்.ஏ.நிபுணவும் அகில இலங்கை மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றிருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM